யோகாவை அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றுவோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) தெரிவித்தார்.
நாடுமுழுவதும் இன்று, சர்வதேச யோகா நாள் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேகாலயா, அப்பர் ஷில்லாங்கில் உள்ள இந்திய விமானப்படையின் மேம்பட்ட தரையிறங்கு தளத்தில் சர்வதேச யோகா நாளைக் கொண்டாடிய ராஜ்நாத் சிங், மக்களுக்கு தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
யோகா என்பது, இந்தியாவின் தொன்மையான அறிவு மரபிலிருந்து உருவானது. இது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனுக்கு வழிவகுக்கிறது.
ஆரோக்கியமான உடலையும், அமைதியான மனதையும், வலிமையான நாட்டையும் கட்டியெழுப்புவதற்காக, இந்த யோகா தினத்தில், அதை நமது அன்றாட வாழ்வின் ஓர் இன்றியமையாத அங்கமாக மாற்றிக்கொள்ள உறுதியெடுப்போம் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
Summary
Union Defence Minister Rajnath Singh said on Sunday (June 21) that yoga should be made a part of daily life.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாகிஸ்தான் அத்துமீறினால் கற்பனைக்கு அப்பாற்பட்ட பதிலடி கொடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்
மனிதர்களின் இரக்கத்துக்கு மாற்றாக அமையாது செய்யறிவு! ராஜ்நாத் சிங்

ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பல்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!
எதிர்காலத்திலும் போரில் வெற்றிபெற வீரர்களால்தான் முடியும்; செய்யறிவால் அல்ல! ராஜ்நாத் சிங்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |




