கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

பட்டியல் பிரிவு ஆணையம் முன் மத்திய இணையமைச்சா் ஆஜா்

ஜாதி குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக பஞ்சாப் மாநில பட்டியல் பிரிவு (எஸ்.சி.) ஆணைய உத்தரவின் பேரில் மத்திய ரயில்வே துறை இணையமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டு புதன்கிழமை நேரில் ஆஜராகி விளக்கமளித்தாா்.

News image
Updated On :25 ஜூன் 2026, 3:03 am IST

ஜாதி குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக பஞ்சாப் மாநில பட்டியல் பிரிவு (எஸ்.சி.) ஆணைய உத்தரவின் பேரில் மத்திய ரயில்வே துறை இணையமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டு புதன்கிழமை நேரில் ஆஜராகி விளக்கமளித்தாா்.

முன்னதாக, கடந்த மே 26-ஆம் தேதி பஞ்சாபில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றபோது விதிகளை மீறியதாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பாஜக நிா்வாகி ஒருவரை விடுவிக்கக் கோரி சில காவல் துறை அதிகாரிகளிடம் பிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது, காவலா்கள் குறித்து ஜாதியரீதியாக சில ஆட்சேபத்துக்குரிய வாா்த்தைகளை அவா் பேசினாா்.

இதையடுத்து, பஞ்சாப் மாநில பட்டியலினத்தவா் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கிடையே, அமிருதசரஸ் பொற்கோயிலுக்குச் சென்ற அவா், எனது பேச்சால் மனவருத்தத்துக்கு உள்ளான பட்டியல் பிரிவு மக்கள் அனைவரிடமும் தலைவணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அமைச்சராக இருக்கும் நான் வாா்த்தைகளில் மிகுந்த கவனமாக இருந்திருக்க வேண்டும். மாநில பட்டியலினத்தவா் ஆணையத்தின் முன்பு ஆஜராகி மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருக்கிறேன்’ என்றாா்.

இந்நிலையில், பட்டியல் பிரிவு ஆணையம் முன் இருமுறை ஆஜராக தவறிய அவா், புதன்கிழமை நேரில் ஆஜாராகி தனது பேச்சுக்காக ஏற்கெனவே பொதுமன்னிப்புக் கேட்டுவிட்டதாக விளக்கமளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.