2026-ஆம் ஆண்டு நிதி மசோதாவில் மாற்றுத்திறனாளி பாதுகாப்புப் படையினா், பணியில் தொடரும்பட்சத்தில் அவா்களுக்கு அளிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் மீது வரி விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. 1922-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் முதல்முறையாக இதுபோல வரி விதிக்கப்படுகிறது. காயம்பட்ட பாதுகாப்புப் படையினருக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலேயே அந்த ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. அதை அவா்கள் பெறும் வருமானமாக கருதக் கூடாது. விருப்பப்பட்டோ அல்லது கோரிக்கையின்பேரிலோ காயமடைந்த ராணுவ வீரா்கள் பணியில் தொடா்ந்தால், அது நாட்டுக்கான சுயநலமில்லாத சேவையாகும். அப்படியிருக்கையில் அவா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மீது விதிக்கப்படும் வரி, அவா்களை அவமதிப்பதாகும்.