மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பிரிவினைக் குரல்களுக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்கள்! பிகார் ஆளுநர்

கல்விச் சிந்தனை அரங்கில் பிகார் ஆளுநர் பேசியது பற்றி...

News image
கல்விச் சிந்தனை அரங்கில் பிகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான்
Updated On :3 மார்ச் 2026, 10:27 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஊடகங்கள் பிரிவினைக் குரல்களுக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுப்பதாக பிகார் மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கின் இரண்டாவது நாளில், பிகார் மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது:

"பிரிவினையை நம்பி வளரும் ஒருசில அரசியல் தலைவர்கள் இருக்கின்றனர். ஊடகங்கள் பிரிவினைக் குரல்களுக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

நாட்டில் விவாகரத்து பெறாமலேயே பெண்களை அவர்களின் கணவர்கள் கைவிடுவதை தடுக்க சிஆர்பிசியில் மூன்று திருத்தங்கள் செய்யப்பட்டது. இதனால், 1973 ஆம் ஆண்டு அனைத்தையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் திருத்தத்தைக் கொண்டு வந்தது. ஆனால், இந்த திருத்தத்துக்கு பின்பும் அதையே வழக்கமாக கொண்டனர். திருத்தத்தை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை.

விவாகரத்து பெற்ற பெண்களின் பராமரிப்பு செலவை கணவர் ஏற்க வேண்டும். யாராவது பெற்றோரை விட்டுச் சென்றாலும் இது பொருந்தும். மனைவி உயிரிழந்த பிறகு மறுமணம் செய்பவர்களின் குழந்தைகளுக்கும் இது பொருந்தும். ஆனால், மனைவியைக் கைவிடாமலேயே சிலர் வேறொருவரை திருமணம் செய்கிறார்கள்.

1986 ஆம் ஆண்டு இருந்ததை விட தற்போது தாராளவாத மதகுருமார்கள், முஸ்லிம் தலைவர்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் இன்னும் தலைமைக்கு எதிராக வெளிப்படையாகப் பேசத்தொடங்கவில்லை" எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.