ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!
ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு இந்திய அரசு இரங்கல் தெரிவித்துள்ளது...


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு மத்திய அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் அந்நாட்டின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கடந்த பிப். 28 அன்று கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், தில்லியில் உள்ள ஈரான் தூரதகத்திற்கு வியாழக்கிழமை (மார்ச் 5) நேரில் சென்ற மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கமேனியின் மறைவுக்கு இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஈரான் தூதரகத்தில் கமேனியின் மறைவுக்காக வைக்கப்பட்டுள்ள இரங்கல் புத்தகத்தில் விக்ரம் மிஸ்ரி கையெழுத்திட்டார். பின்னர், இந்தியாவுக்கான ஈரானின் தூதர் முகமது ஃபாதாலியை நேரில் சந்தித்து அவர் உரையாடினார்.
முன்னதாக, ஈரானின் தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு இரங்கல் மற்றும் கண்டனம் தெரிவிக்காமல் தாமதம் செய்ததற்குப் பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...