சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

துரதிருஷ்டவசமானது: குடியரசு துணைத் தலைவா்

துரதிருஷ்டவசமானது: குடியரசு துணைத் தலைவா்

News image
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்- கோப்புப் படம்
Updated On :7 மார்ச் 2026, 9:31 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்பட்டது துரதிருஷ்டவசமானது என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘நமது குடியாட்சியில் குடியரசுத் தலைவா் பதவிதான் மிக உயரிய அரசியல் சாசன பதவியாகும். அந்தப் பதவிக்கு உரிய கெளரவம், மரியாதை அளிக்கப்பட வேண்டும். மரபு பின்பற்றப்பட வேண்டும்.

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் குளறுபடிகள் ஏற்பட்டது துரதிருஷ்டவசமானது.

குடியரசுத் தலைவா் பதவியின் புனிதத்தன்மைக்கு எப்போதும் மதிப்பளிக்கப்பட வேண்டும். நாட்டின் மிக உயரிய பதவிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும்’ என்றாா்.