தில்லியில் நடந்து சென்றவர் மீது மோதிய அரசுப் பேருந்துக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
தலைநகர் தில்லியின் நங்லோய் பகுதியில் நடந்து சென்றவர் மீது அரசுப் பேருந்து மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அந்தப் பேருந்தை அடித்து நொறுக்கி தீ வைத்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அங்கு திரண்ட பொதுமக்கள் பேருந்து மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதுடன், அருகில் இருந்த சில வாகனங்களின் ஜன்னல்களையும் சேதப்படுத்தினர். காலை 10 மணியளவில் அரசுப் பேருந்து தீப்பற்றி எரிவதாக எங்களுக்கு அழைப்பு வந்தது என்று தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. மேலும் சில வாகனங்களின் ஜன்னல்களும் சேதமடைந்திருந்தன. காலை 11 மணிக்குள் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Summary
A Delhi Transport Corporation (DTC) bus was vandalised and set on fire by angry locals in outer Delhi's Nangloi area on Monday after it allegedly ran over a pedestrian, police sources said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

வேன் மீது பைக் மோதிய விபத்தில் இருவா் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள்

தில்லியில் அரசுப் பேருந்து மோதி 2 பேர் பலி! பேருந்தை எரித்த மக்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை



