நகர்ப்புற நக்சல் போல் நடந்து கொள்கிறார் ராகுல்: கிரிராஜ் சிங் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி குறித்து கிரிராஜ் சிங் விமர்சனம்..


மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நகர்ப்புற நக்சல் போல் நடந்துகொள்வதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ராகுல் காந்தி அவையில் விவாதத்தை தவிர்ப்பதாகவும், வாக்களிப்பதைத் தவிர்த்து வருவதாகவும், மேற்கு ஆசிய மோதல், மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான விவாதங்களை தவிர்ப்பது மிகவும் மோசமான செயல்.
எனக்குப் புரியவில்லை, இப்படிப்பட்ட ஒரு எதிர்க்கட்சி தலைவரை நான் பார்த்ததில்லை. அவருக்கு எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை, ராகுல் நகர்ப்புற நக்சல் போல நடந்து கொள்கிறார்.
எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும், வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் ஏன் அவர்களிடமிருந்து ராகுல் பயந்து ஓடுகிறார்?
முகலாய வம்சத்தின் கடைசி முகலாய பேரரசர் பகதூர் ஷா போன்று, காங்கிரஸுக்கும் அவர் அதே தான். போலி காந்தி குடும்பத்தின் அறியாமையிலிருந்த கடைசி இளவரசர் இவர்தான் என்று அவர் குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து ஆளும் பாஜகவிற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நடைபெற்று காரசார விவதங்களுக்கு மத்தியில் அமைச்சர் கிரிராஜின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...