வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சகோதரியைக் கொலைசெய்து அம்மாவிடம் 'சர்ப்ரைஸ்' என்று கூறிய மகன்!

உத்தர பிரதேசத்தில் வாழ்க்கையில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்திய சகோதரியை சகோதரன் கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு

News image
கொலை- சித்திரிப்பு
Updated On :14 மார்ச் 2026, 10:32 am

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தர பிரதேசத்தில் வாழ்க்கையில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்திய சகோதரியை சகோதரன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் மொரதாபாதில் இன்சூரன்ஸ் கம்பெனியில் உதவி மேலாளராகப் பணிபுரியும் நீலிமா என்பவரின் பிள்ளைகளான 25 வயதில் இரட்டையர்கள் ஹர்திக் மற்றும் ஹிமான்சிகா ஆகிய இருவரும் பொறியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இதனிடையே, கடந்த சில நாள்களாகவே ஹர்திக் வேலையிலும் வாழ்க்கையிலும் கவனம் செலுத்தாமல், சமூக ஊடகங்களில் மட்டுமே அதிகப்படியான நேரத்தைச் செலவழித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஹர்திக்கின் இந்தப் போக்கை நீலிமாவும் ஹிமான்சிகாவும் கண்டித்து வந்துள்ளனர்.

மேலும், வேறு மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை ஹர்திக் காதலித்து வந்ததாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதியில் நீலிமாவை அவரது நிறுவனத்துக்கே சென்று அழைத்து, வீட்டில் சர்ப்ரைஸ் வைத்திருப்பதாக ஹர்திக் கூட்டிச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வீட்டுக்கு சென்ற நீலிமா, தனது மகள் ஹிமான்சிகா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

செல்போன் பயன்படுத்துவதை நிறுத்துமாறு தன்னைத் தொடர்ந்து ஹிமான்சிகா கண்டித்ததால், வாக்குவாதம் முற்றி, அவரைக் கொன்றுவிட்டதாக ஹர்திக் கூறியுள்ளார். மேலும், நீலிமாவையும் ஹர்திக் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர், ஹர்திக்கை கைது செய்தனர். மேலும், நீலிமாவையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதுமட்டுமின்றி, பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, ஹிமான்சிகாவின் உடலில் 84 வெட்டுக் காயங்கள் இருப்பதாகவும் கூறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.