45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருநங்கைகளுக்கு இலவசப் பேருந்து பயணம்: தில்லி முதல்வர் அறிவிப்பு!

தில்லியில் திருநங்கைகளுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்ட அறிவிப்பு பற்றி...

News image
தில்லி முதல்வர் ரேகா குப்தா- கோப்புப் படம்
Updated On :16 மார்ச் 2026, 12:52 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தில் திருநங்கைகளையும் இணைத்து தில்லி முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார்.

தில்லியில் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அந்தத் திட்டத்தின் அதே வழிமுறையில் தற்போது திருநங்கைகள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ள திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த முடிவு தில்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அமைச்சர்கள் கூட்டத்தில் இன்று எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்தத் திட்டம் சமூக ஒருங்கிணைவு, கண்ணியம், சம உரிமை ஆகியவை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற ரேகா குப்தா தலைமையிலான தில்லி அரசின் முயற்சியை பிரதிபலிக்கிறது. இதன்மூலம், திருநங்கைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் நகரத்தின் எந்த மூலைக்கும் நிதித் தடைகள் இல்லாமல் சென்று வரமுடியும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தில்லி முதல்வர் ரேகா குப்தா இதுபற்றிப் பேசுகையில், “நமது அரசு, ஒவ்வொரு குடிமக்களும் மரியாதையுடன் தங்களுக்கான வாய்ப்புகள் மற்றும் சேவைகளை அணுகக்கூடிய விதத்தில், அனைவரையும் உள்ளடக்கிய, சமமான தில்லியை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது” என்று தெரிவித்தார்.

முன்னதாக, ’பிங்க் சஹேலி’ எனப்படும் அட்டையை இம்மாதத் தொடக்கத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தில்லியில் அறிமுகப்படுத்தியிருந்தார். இதன்மூலம், தில்லியில் பெண்கள் இலவசப் பேருந்து பயணம் மேற்கொள்ளவும், மெட்ரோ போன்ற சேவைகளைக் கட்டணம் மூலம் பயன்படுத்தவும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ’பிங்க் சஹேலி’ அட்டை வாங்கும் வரை அடுத்த 3 மாதங்களுக்குப் பெண்கள் பிங்க் டிக்கெட் மூலம் இலவசப் பேருந்துப் பயணம் மேற்கொள்ளலாம் என முதல்வர் தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.