புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

மேற்கு வங்கத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி - பிடிஐ

Updated On :17 மார்ச் 2026, 1:15 pm

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடைபெறவிருக்கும் இம்மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளில் இது போன்ற உயர்நிலை மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

மேற்கு வங்கத்தின் தெற்கு மற்றும் வடக்கு மாகாணத்திற்குட்பட்ட 13 மாவட்டங்களில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஹெளரா, பாரக்பூர், சாந்தன்நகர் மற்றும் அன்சோல் - துர்காபூர் நகர ஆணையர்கள், 12 காவல் துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில், 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23 மற்றும் 29 என இரு தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. 152 தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும் 142 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது.

Summary

19 IPS officers changed by EC in West Bengal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.