தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!

5 மாநிலங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பது பற்றி...

News image
தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்)
Updated On :17 மார்ச் 2026, 10:24 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதியும், புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கும் ஏப்ரல் 9-ஆம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த 5 மாநிலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு, தேர்தல் ஆணையம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றது.

தமிழ்நாட்டுக்கு 136 பொதுப் பார்வையாளர்கள், 40 காவல் பார்வையாளர்கள், 151 செலவினப் பார்வையாளர்கள் என மொத்தம் 327 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் உள்ள 832 தொகுதிகளுக்கு மொத்தம் 1,111 பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இவர்கள் அனைவரும் அந்தந்த மாநிலங்களில் நாளை (மார்ச் 18) முதல் முகாமிட்டு தேர்தல் பணிகளை கண்காணிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Election Observers Appointed for 5 States, Including Tamil Nadu!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.