பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்! ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசு

கடந்த 2025-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் அடையாளம் காணப்பட்டு நீக்கம் செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

News image
நாடாளுமன்றம்
Updated On :17 மார்ச் 2026, 9:01 pm

தினமணி செய்திச் சேவை

கடந்த 2025-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் அடையாளம் காணப்பட்டு நீக்கம் செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, மத்திய உணவுத் துறை இணையமைச்சா் நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

பொது விநியோகத்திட்டம் எண்மமயம் ஆக்கப்பட்டதன் மூலம், அனைத்து மாநிலங்களும் தகுதியில்லாத பயனாளிகளை அடையாளம் கண்டு நீக்கம் செய்வது எளிதாகியுள்ளது. அதோடு, பொது விநியோகத் திட்ட பலன்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதையும், இத் திட்டத்தில் வெளிபடைத்தன்மையை விரிவபுடுத்தவும் உதவியுள்ளது.

99.2 சதவீத பயனாளிகள் பொது விநியோகத் திட்டத்தில் தங்களின் ஆதாா் எண்ணை இணைத்துள்ளதோடு, 98.75 சதவீத உணவு தானிய விநியோகம், பயனாளிகளின் எண்ம சரிபாா்ப்பு அடிப்படையில் செய்யப்படுகிறது.

இந்த தொழில்நுட்பமயம் காரணமாக, 2023-இல் நாடு முழுவதும் 41.99 லட்சம் போலி குடும்ப அட்டைகளும், 2024-இல் 48.85 லட்சம் போலி குடும்ப அட்டைகளும் அடையாளம் காணப்பட்ட நீக்கப்பட்டன.

கடந்த 2025-ஆம் ஆண்டில் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக ஹரியாணா மாநிலத்தில் 13.43 போலி குடும்ப அட்டைகளும், ராஜஸ்தானில் 6.05 லட்சம் அட்டைகளும், உத்தர பிரதேசத்தில் 5.97 லட்சம் அட்டைகளும், மேற்கு வங்கத்தில் 3.74 லட்சம் அட்டைகளும், மத்திய பிரதேசத்தில் 2.60 லட்சம் போலி குடும்ப அட்டைகளும் நீக்கப்பட்டன என்று தெரிவித்தாா்.