2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசு
கடந்த 2025-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் அடையாளம் காணப்பட்டு நீக்கம் செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.


கடந்த 2025-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் அடையாளம் காணப்பட்டு நீக்கம் செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக, மத்திய உணவுத் துறை இணையமைச்சா் நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:
பொது விநியோகத்திட்டம் எண்மமயம் ஆக்கப்பட்டதன் மூலம், அனைத்து மாநிலங்களும் தகுதியில்லாத பயனாளிகளை அடையாளம் கண்டு நீக்கம் செய்வது எளிதாகியுள்ளது. அதோடு, பொது விநியோகத் திட்ட பலன்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதையும், இத் திட்டத்தில் வெளிபடைத்தன்மையை விரிவபுடுத்தவும் உதவியுள்ளது.
99.2 சதவீத பயனாளிகள் பொது விநியோகத் திட்டத்தில் தங்களின் ஆதாா் எண்ணை இணைத்துள்ளதோடு, 98.75 சதவீத உணவு தானிய விநியோகம், பயனாளிகளின் எண்ம சரிபாா்ப்பு அடிப்படையில் செய்யப்படுகிறது.
இந்த தொழில்நுட்பமயம் காரணமாக, 2023-இல் நாடு முழுவதும் 41.99 லட்சம் போலி குடும்ப அட்டைகளும், 2024-இல் 48.85 லட்சம் போலி குடும்ப அட்டைகளும் அடையாளம் காணப்பட்ட நீக்கப்பட்டன.
கடந்த 2025-ஆம் ஆண்டில் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக ஹரியாணா மாநிலத்தில் 13.43 போலி குடும்ப அட்டைகளும், ராஜஸ்தானில் 6.05 லட்சம் அட்டைகளும், உத்தர பிரதேசத்தில் 5.97 லட்சம் அட்டைகளும், மேற்கு வங்கத்தில் 3.74 லட்சம் அட்டைகளும், மத்திய பிரதேசத்தில் 2.60 லட்சம் போலி குடும்ப அட்டைகளும் நீக்கப்பட்டன என்று தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...