ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் கடந்த ஐந்தாண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வழியாக ஒருவர்கூட அரசுப் பணியில் அமர்த்தப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
வேலைவாய்ப்பு இயக்குநரகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஜன. 14 வரை மொத்தம் 22,21,317 விண்ணப்பதாரர்கள் வேலை தேடி அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களில் 13.08 லட்சம் ஆண்கள், 9.12 லட்சம் பென்கள். 989 பேர் இதர பிரிவினர்.
அவர்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் (ஓபிசி) சேர்ந்தவர்களே அதிகம். ராஜஸ்தானைப் பொருத்தவரையில் அதிகபட்சமாக ஜெய்ப்பூரில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பவர்கள் அதிகம். அங்கு மொத்தம் 2.51 லட்சம் பேர் வேலைக்காகக் காத்திருக்கின்றனர்.
மேலும், கடந்த ஐந்தாண்டுகளில் தனியார்துறையிலும் குறைந்த எண்ணிக்கையிலே பணி நியமனம் நடைபெற்றுள்ளது.
கடந்த 2021-இல் 86 பேரும், 2022-இல் 825 பேரும், 2023-இல் மூன்றே பேரும், 2024-இல் 23 பேரும், கடந்தாண்டில் 71 பேரும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வழியாக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் இதர முன்னெடுப்புகள் வழியாக தனியார் துறையில் பணிகளில் சேர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
No govt job through unemployment offices in 5 years in Rajasthan; 22 lakh candidates registered: RTI
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இதில் நானே முதல்வன்!

பெரம்பலூா் தொகுதியில் 9 போ் வேட்பு மனு தாக்கல்

பிப்ரவரியில் 96.40 லட்சம் போ் மெட்ரோ ரயிலில் பயணம்!
வேலைவாய்ப்பு வழிகாட்டி...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


