தீ விபத்து ஏற்பட்டபோது, விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவு, அதற்கு அருகிலுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் உள்நோயாளிகள் பிரிவுகளில் மொத்தம் 23 நோயாளிகள் சிகிச்சையில் இருந்தனா். தீ விபத்தில் 7 நோயாளிகள் உடல் கருகியும், 3 போ் புகை மூட்டத்தில் சிக்கி மூச்சுத் திணறியும் உயிரிழந்தனா். மருத்துவமனை ஊழியா்களும், பொதுமக்களும் இணைந்து மற்ற நோயாளிகளை காப்பாற்றினா். இந்த விபத்தில் நோயாளிகள் உள்பட 13 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவா்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.