மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஒன்றரை நாள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும்!

ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு வந்துள்ள எல்பிஜி, ஒன்றரை நாளின் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் என ப. சிதம்பரம் கருத்து...

News image
எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் துறைமுகம் வந்த கப்பல்- பிடிஐ
Updated On :18 மார்ச் 2026, 3:40 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு வந்துள்ள கப்பல்களில் உள்ள எல்பிஜி, நாட்டின் ஒன்றரை நாள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்று (மார்ச் 18) தெரிவித்துள்ளார்.

இரண்டு கப்பல்களில் வந்துள்ள 92,700 மெட்ரிக் டன் திரவ எரிவாயு (எல்பிஜி) இந்தியாவின் ஒட்டுமொத்த ஒருநாள் தேவையுடன் ஒப்பிடும்போது, 1.25 முதல் 1.6 நாள்களுக்கு மட்டுமே போதுமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கூகுளிடம் கேட்டபோது இந்த விவரங்களை அளித்தது எனக் குறிப்பிட்டு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ப. சிதம்பரம் பதிவிட்டுள்ளதாவது:

''மார்ச் 14 - 17 வரையிலான தேதியில் சிவாலிக் மற்றும் நந்தா தேவி என இரு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்து எல்பிஜி உடன் இந்தியாவுக்கு வந்துள்ளன. இந்த இரு கப்பல்களிலும் ஒட்டுமொத்தமாக 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த அளவானது இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் தேவையுடன் ஒப்பிடும்போது 1.25 முதல் 1.6 நாள்களின் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும்.

இந்த இரண்டு கப்பல்களில் வந்துள்ள எல்பிஜி சிறிய தொடக்கம் மட்டுமே. இன்னும் வெகுதூரம் செல்லவேண்டியுள்ளது. சமையல் எரிவாயு கிடைப்பதில் நெருக்கடி நிலவுகிறது'' எனப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரானும் அமெரிக்க நட்பு நாடுககளில் உள்ள தளவாடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதால், போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது.

உலகளவில் நடக்கும் எரிபொருள் வணிகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடக்கிறது. பாரசீக வளைகுடாவில் உள்ள ஹோர்முஸ் நீரிணைக்கு வடகிழக்கு எல்லையில் ஈரான் அமைந்துள்ளதால், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்வதற்கு ஈரான் தடை விதித்திருந்தது.

பின்னர், அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் கப்பல்கள் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள் தவிர மற்ற நாடுகளுக்கான கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லலாம் என ஈரான் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு வர வேண்டிய சிவாலிக் மற்றும் நந்தா தேவி என்ற இரு கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்தது. இந்த இரு கப்பல்களிலும் 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.