நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு, மகாராஷ்டிர அரசு பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மகளுக்கு அரசுப் பணியை வழங்கியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் 2025, ஏப்ரல் 22 ஆம் தேதியன்று பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றதில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலியான 26 பேரில் சந்தோஷ் ஜக்தாலே உள்பட மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசுப் பணி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் உறுதியளித்திருந்தனர்.
முன்னதாக, அரசுப் பணி தருவதாக உறுதியளித்து பல மாதங்கள் கடந்தும் உரிய ஆணை வழங்கப்படவில்லை என சந்தோஷ் ஜக்தாலேவின் மகள் அசாவரி ஜக்தலே கூறியிருந்தார்.
இந்த நிலையில், புணே மாநகராட்சியில் நிர்வாக அதிகாரியாக அசாவரி ஜக்தாலேவை நியமித்து, புணே மேயர் புதன்கிழமை (மார்ச் 18) அவருக்கு நியமனக் கடிதத்தை வழங்கினார்.
மேலும், அசாரி முதுகலைப் பட்டம் முடித்த பட்டாதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
After a long wait, the Maharashtra government has offered a government job to the daughter of a victim of the Pahalgam attack.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

4 வயது சிறுமி பாலியல் படுகொலை சம்பவம்: எஸ்ஐடி அமைத்தது மகாராஷ்டிர அரசு

நெல்லை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை

பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல்

‘பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது’... பஹல்காம் தாக்குதல் நாளில் பிரதமர் மோடி!
வீடியோக்கள்

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


