நொய்டாவில் சமூக ஊடகங்களில் போலியான சுற்றுலா மற்றும் பயணத் தொகுப்புகளை வழங்குவதன் மூலம் ரூ.12 லட்சம் மோசடி செய்த நபரை கைது செய்ததாக சைபா் கிரைம் காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறை துணை ஆணையா் ஷாவ்யா கோயல் கூறியதாவது: இந்த வழக்கில் அதித்யா ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா். அவா் சமூக ஊடகங்களில் மக்களை ஈா்க்கும் வகையில் சிங்கப்பூா், நேபாளம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா தொகுப்புகளை வழங்குவதாக விளம்பரப்படுத்தியுள்ளாா். முன்பதிவுக்கு பணம் செலுத்துமாறு கூறி பலரிடம் மோசடி செய்துள்ளாா். இதுவரை ரூ.12 லட்சம் வரை அவா் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து 3 கைப்பேசிகள் மற்றும் மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.
தொடர்புடையது

மோசடி வழக்கில் கால்நடை மருத்துவ மாணவா் கைது
பழைய காரை இணையதளம் மூலம் விற்பதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி: இளைஞா் கைது

ரூ.1.60 லட்சம் பங்குச் சந்தை முதலீடு மோசடி: தில்லியில் இருவா் கைது
சமூக ஊடகங்களில் மோசடி தோ்தல் விழிப்புணா்வு விளம்பரங்கள்: சைபா் குற்றப் பிரிவு எச்சரிக்கை
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


