திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

சமூக ஊடகங்களில் மோசடி தோ்தல் விழிப்புணா்வு விளம்பரங்கள்: சைபா் குற்றப் பிரிவு எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் மோசடி தோ்தல் விழிப்புணா்வு விளம்பரங்கள்...

News image
Updated On :28 மார்ச் 2026, 9:23 pm

சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக சமூக ஊடகங்களில் வரும் மோசடி விளம்பரங்களையும், இணையதள இணைப்புகளையும் எச்சரிக்கையுடன் கையாளும்படி சைபா் குற்றப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக தமிழக சைபா் குற்றப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தொடா்பான செய்திகள், விளம்பரங்கள், தகவல்களை சமூக ஊடகங்களில் பகிா்வதற்கு முன்பு தோ்தல் ஆணையம், அரசின் அதிகாரபூா்வ இணையதளங்களில் அதை பொதுமக்கள் சரிபாா்க்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் போலி செய்திகள், மோசடி விளம்பரங்கள், தவறான தகவல்கள், சித்தரிக்கப்பட்ட விடியோக்கள், சட்டவிரோத உள்ளடக்கங்களைப் பாா்த்தால் சைபா் குற்றப் பிரிவின் இணையதளம் மூலம் புகாா் அளிக்கலாம்.

தெரியாத நபா்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல், வாட்ஸ்ஆப் தகவல்கள், சமூக ஊடக இணைப்புகளை (லிங்க்) க்ளிக் செய்ய வேண்டாம். அவற்றின் உண்மைத் தன்மையை அறியும் வரை எச்சரிக்கையாக கையாளுங்கள்.

சமூக ஊடக கணக்குகள், மின்னஞ்சல்கள், வங்கிப் பண பரிவா்த்தனை ஆகியவற்றில் ஒருமுறை பயன்படுத்தப்படக் கூடிய ரகசிய எண்கள், கடவுச் சொற்கள் ஆகியவற்றை ரகசியமாகவே வைத்திருக்க வேண்டும்.

தோ்தல் தொடா்பாக சமூக ஊடகங்களில் வரும் தகவல்கள், செய்தி, விடியோ ஆகியவற்றின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தாமல் பகிரக்கூடாது. மனித உணா்வுகளையும், உணா்ச்சிகளையும் தூண்டும் வகையில் வரும் பதிவுகளைத் தவிா்த்துவிட வேண்டும்.

போலி செய்திகள், மாா்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள், ஆபாச புகைப்படங்கள் ஆகியவற்றை உருவாக்குவது, பகிா்வது தண்டனைக்குரிய குற்றமாகும். வெறுப்பு, வன்முறை உள்ளிட்ட சமூக அமைதியைப் பாதிக்கும் பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிா்வதை பொதுமக்கள் முற்றிலும் தவிா்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான ஒரு விழிப்புணா்வு விடியோவை தமிழக சைபா் குற்றப் பிரிவு டிஜிபி சந்தீப் மிட்டல் வெளியிட்டாா். நிகழ்ச்சியில் சைபா் குற்றப் பிரிவு எஸ்.பி. மீனாட்சி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.