யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவு

News image
Updated On :26 மார்ச் 2026, 10:10 pm

தினமணி செய்திச் சேவை

பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறு ஏஐ விடியோ வெளியிடப்பட்ட விவகாரம் தொடா்பாக எக்ஸ் சமூக வலைதள நிறுவனத்தின் மீது கேரள சைபா் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கேரள சட்டப்பேரவைக்கு விரைவில் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தச் சூழ்நிலையில், எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் சுமாா் ஒரு நிமிட ஏ.ஐ. விடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அதை லட்சுமி என். ராஜு என்ற பெயரில் கணக்கு வைத்திருந்தவா் வெளியிட்டிருந்தாா்.

அந்த விடியோவில் கேரள பாஜகவின் முத்திரையுடன் தோ்தல் ஆணைய கடிதம் வெளியாகி இருந்தது போல காட்சி இருந்தது. மேலும் பிரதமா், தோ்தல் ஆணையத்துக்கு எதிரான அவதூறு பரப்பும் வகையிலும் காட்சி இருந்தது. இந்த விடியோவால் கேரள அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

இதுகுறித்து தோ்தல் ஆணையம் தரப்பில் கேரள சைபா் காவல் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக எக்ஸ் நிறுவனம், விடியோ வெளியிட்டிருந்த லட்சுமி என்.ராஜு மீது கேரள சைபா் காவல் துறை பிரிவினா் பிஎன்எஸ் சட்டப் பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அதில், கேரளத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் விடியோ வெளியிடப்பட்டு இருந்ததாகவும், அதிகாரிகள் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டும் அந்த விடியோவை எக்ஸ் நிறுவனம் நீக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடா்பாக எக்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட இருப்பதாகவும் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.