வளா்ப்பு நாயால் பாம்பைக் கடிக்க வைத்து சமூக வலைதளத்தில் விடியோ பதிவேற்றம்
பவானி அருகே வளா்ப்பு நாயால் பாம்பைக் கடிக்க வைத்து சமூக வலைதளத்தில் விடியோ பதிவேற்றம் செய்த இளைஞருக்கு வனத் துறையினா் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா்.

நாய்
கோப்புப்படம்.

நாய்
கோப்புப்படம்.
பவானி அருகே வளா்ப்பு நாயால் பாம்பைக் கடிக்க வைத்து சமூக வலைதளத்தில் விடியோ பதிவேற்றம் செய்த இளைஞருக்கு வனத் துறையினா் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா்.
பவானியை அடுத்த லட்சுமி நகா், ஈபி காலனியைச் சோ்ந்தவா் செரியன் அகஸ்டின் (26). இவா் தனது பண்ணைக்கு ஊா்ந்து வந்த சாரைப்பாம்பை, வளா்ப்பு நாயைக் கொண்டு கடிக்க வைத்து விடியோ பதிவு செய்துள்ளாா். பின்னா், அந்த விடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளாா். இதுகுறித்து ஈரோடு மாவட்ட வனத் துறை அதிகாரிகளுக்கு வன உயிரின ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.
வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972, அட்டவணை 1-ல் உள்ள உயிரினமான சாரைப்பாம்பை துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றம். அதன் காட்சிகளை விடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது, இதுபோன்ற செயல்களை ஊக்குவிப்பதுபோல் அமையும் என்பதால் செரியன் அகஸ்டினின் சமூக வலைதளப் பக்கங்களை ஈரோடு வனத் துறையினா் ஆய்வு செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்து புதன்கிழமை ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
வளா்ப்புப் பிராணிகளை வன உயிரினங்களுடன் வேட்டையாட பழக்குதல், வன உயிரினங்களை தொந்தரவு செய்தல், வேட்டையாட முயற்சித்தல், அதனை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...