கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு

பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்...

News image

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி

Updated On :21 மார்ச் 2026, 10:12 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் முடிந்தவுடன் சாதாரண பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை மத்திய அரசு உயா்த்த போவதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருகிறது. விரைவில் இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு 100 டாலா் என்ற நிலையை நோக்கி செல்லவுள்ளது. இத்துடன் தொழிலக டீசல் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வெறும் எண்கள் இல்லை. பணவீக்கம் அதிகரிக்க போகிறது என்பதற்கான அறிகுறியே இது.

மத்திய அரசோ அனைத்தும் இயல்பாக உள்ளது என கூறுகிறது. உண்மை நிலவரமோ அதற்கு மாறாக உள்ளது. பொருள்கள் தயாரிக்க ஆகும் செலவீனமும், அதை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவும் அதிகரிக்க போகிறது. சிறுகுறு தொழில்கள் இதனால் மிகவும் பாதிக்கப்பட போகிறது.

அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை அதிகரிக்க போகிறது. இது இந்தியா்கள் அனைவரையும் பாதிக்கும். இதேபோல் வெளிநாட்டு முதலீடுகளும் விரைவில் வெளியேற போகின்றன. இது நமது வா்த்தக சந்தைகளுக்கு கடும் நெருக்கடியை தரும்.

தமிழகம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கான தோ்தல் முடிந்தவுடன், சாதாரண பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் (எல்பிஜி) விலையை அரசு உயா்த்த போகிறது. நமது நாட்டின் தற்போதைய பொருளாதார சூழலை எதிா்கொள்வதற்கு, பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசிடம், எந்த தொலைநோக்கு பாா்வையோ அல்லது திட்டமோ இல்லை. வெற்று பேச்சு மட்டுமே உள்ளது.

இவ்வாறு அந்த பதிவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.