கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சிறைகளின் நிலை: அறிக்கை சமா்ப்பிக்க மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

சிறைகளில் உள்ள கைதிகள் மற்றும் பெண் கைதிகளின் எண்ணிக்கை உள்பட அனைத்துத் தகவல்களையும் மே 18-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :22 மார்ச் 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

சிறைகளில் உள்ள கைதிகள் மற்றும் பெண் கைதிகளின் எண்ணிக்கை உள்பட அனைத்துத் தகவல்களையும் மே 18-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறைகளில் மனிதத்தன்மையற்ற சூழல் நிலவுவதாக கடந்த 2023-இல் வெளியான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் உள்ள சிறைகளின் நிலை குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு உதவுபவராக மூத்த வழக்குரைஞா் கௌரவ் அகா்வால் செயல்பட்டு வருகிறாா்.

இதுதொடா்பாக கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘சிறைகளின் உண்மை நிலை குறித்து அறிய பல்வேறு தரவுகள் தேவைப்படுகின்றன.

எனவே, ஒவ்வொரு சிறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை மற்றும் தற்போது அங்குள்ள கைதிகளின் எண்ணிக்கை, ஒதுக்கப்பட்டதைவிட அதிக எண்ணிக்கையிலான கைதிகளைக் கொண்ட சிறைகள் மற்றும் அதை ஒழுங்குபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பெண் கைதிகள் மற்றும் பெண்களுக்கான சிறைகள், பெண் கைதிகளுக்கு சிறையில் அளிக்கப்பட்டுள்ள வசதிகள், பெண் கைதிகளோடு உள்ள குழந்தைகளுக்கான கல்வி மற்றும் மருத்துவ வசதிகள், சிறை ஊழியா்களின் எண்ணிக்கை, காலிப் பணியிடங்கள் மற்றும் அவற்றை நிரப்ப மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் உள்பட சிறை நிா்வாகம் குறித்த அனைத்து அண்மைத் தகவல்களையும் மே 18-ஆம் தேதிக்குள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சமா்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்தின் உள்துறைச் செயலா்கள் சமா்ப்பிக்கும் இந்த அறிக்கைகளை நீதிமன்றத்துக்கு உதவும் வழக்குரைஞா் கெளரவ் அகா்வாலுக்கு உச்சநீதிமன்ற பதிவேடுகள் துறை அனுப்பும். அதை கௌரவ் கோகாய் முழுமையாக ஆய்வு செய்வாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.