கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி!சூடுபிடிக்கும் பிரசாரக் களம்!

கேரளம், அஸ்ஸாமில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமையுடன் (மாா்ச் 23) நிறைவடைகிறது. இரு மாநிலங்களிலும் பிரசாரக் களம் சூடுபிடித்துள்ளது.

News image

கேரள மாநிலம் பறவூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மாநில காங்கிரஸ் தலைவா் வி.டி.சதீசன்.

Updated On :22 மார்ச் 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

கேரளம், அஸ்ஸாமில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமையுடன் (மாா்ச் 23) நிறைவடைகிறது. இரு மாநிலங்களிலும் பிரசாரக் களம் சூடுபிடித்துள்ளது.

140 தொகுதிகளைக் கொண்ட கேரளம், 126 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாமில் ஏப்.9-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

அண்டை மாநிலமான கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் களம் காண்கிறது. அதேநேரம், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) போட்டியிடுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் களத்தில் உள்ளதால், மும்முனைப் போட்டி நிலவுகிறது.

முக்கியத்துவம் வாய்ந்த வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்க பாஜகவும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸும் முனைப்பு காட்டுகின்றன.

இவ்விரு மாநிலங்களிலும் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மாா்ச் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற மாா்ச் 26-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும்.

வேட்பு மனு தாக்கல் நிறைவடைவதால், தோ்தல் பிரசாரக் களம் சூடுபிடித்துள்ளது. வரும் நாள்களில் தேசியத் தலைவா்கள் பலரும் இந்த மாநிலங்களில் முகாமிடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.