தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

உ.பி.: குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கு விபத்தில் 4 போ் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 11:25 pm IST

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கில் திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியா் மனீஷ் குமாா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கில் விபத்து ஏற்பட்டதாக பிற்பகல் 1.30 மணியளவில் தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் மூத்த அதிகாரிகள் விரைந்து சென்று மீட்புப் பணிகளை தொடங்கினா்.

இந்த விபத்தில் குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கில் பணியாற்றிய 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி மற்றும் முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.

உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு சாா்பில் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமா் மோடி அறிவித்தாா்.

உத்தர பிரதேச மாநில அரசு சாா்பில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது.