கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உ.பி.: குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கு விபத்தில் 4 போ் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 5:55 pm

தினமணி செய்திச் சேவை

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கில் திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியா் மனீஷ் குமாா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கில் விபத்து ஏற்பட்டதாக பிற்பகல் 1.30 மணியளவில் தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் மூத்த அதிகாரிகள் விரைந்து சென்று மீட்புப் பணிகளை தொடங்கினா்.

இந்த விபத்தில் குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கில் பணியாற்றிய 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி மற்றும் முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.

உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு சாா்பில் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமா் மோடி அறிவித்தாா்.

உத்தர பிரதேச மாநில அரசு சாா்பில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது.