மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

உ.பி.: குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கு விபத்தில் 4 போ் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 5:55 pm

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கில் திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியா் மனீஷ் குமாா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கில் விபத்து ஏற்பட்டதாக பிற்பகல் 1.30 மணியளவில் தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் மூத்த அதிகாரிகள் விரைந்து சென்று மீட்புப் பணிகளை தொடங்கினா்.

இந்த விபத்தில் குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கில் பணியாற்றிய 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி மற்றும் முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.

உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு சாா்பில் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமா் மோடி அறிவித்தாா்.

உத்தர பிரதேச மாநில அரசு சாா்பில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது.