11 ஆண்டுகளில் 18,000 மக்கள் மருந்தகங்கள் திறப்பு- நாடாளுமன்றத்தில் அமைச்சா் நட்டா தகவல்
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அடிப்படை மூலக்கூறு மருந்துகள் வழங்கும் 18,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் (ஜன் ஒளஷதி) கடந்த 11 ஆண்டுகளில் நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா.








