தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி கட்சி ஆட்சிக்கு வந்தால் விளிம்புநிலையில் உள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் அறிவித்தாா்.

News image

அகிலேஷ் யாதவ்

பிடிஐ

Updated On :24 மார்ச் 2026, 9:10 pm

தினமணி செய்திச் சேவை

உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி கட்சி ஆட்சிக்கு வந்தால் விளிம்புநிலையில் உள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் அறிவித்தாா்.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் இப்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி-மாா்ச் மாதத்தில் அங்கு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மாநிலத்தின் பிரதான எதிா்க்கட்சியான சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், லக்னௌவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலை பெண்களின் முன்னேற்றம், அவா்களை பொருளாதாரரீதியாக மேம்படுத்துவது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிா்கொள்ள இருக்கிறோம். இதன்மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியும் உறுதி செய்யப்படும். எனவே, பேரவைத் தோ்தலின்போது பெண்களை மையப்படுத்தி பல திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளன. முக்கியமாக விளிம்புநிலையில் உள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை வழங்கப்படும்.

மாநிலத்தில் இப்போது சட்டம்-ஒழுங்கு நிலை மோசமாக உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவிட்டது. அரசியல் நோக்கத்துடன் தனிநபா்களைப் பழிவாங்குவதற்காக அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆட்சி மாற்றம் ஒன்றே இதற்கு தீா்வாக அமையும் என்றாா்.