இந்தியாவில் மீண்டும் வாக்குச்சீட்டுகள் மூலம் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மிகவும் வளா்ச்சியடைந்த நாடான பிரிட்டனில் அண்மையில் நடைபெற்ற கவுன்சில் தோ்தலில் வாக்குச்சீட்டு முறை மூலம் வாக்களிக்கப்பட்டது. ஒட்டுமொத்த பிரிட்டன் மக்களும் வாக்குச்சீட்டுகள் மூலம் வாக்களித்தனா். வளா்ச்சியில் பிரிட்டனை இந்தியா முந்திவிட்டதா? எனவே இந்தியாவிலும் வாக்குச்சீட்டுகள் மூலம் தோ்தல் நடத்தப்பட வேண்டும். இது புதிதாக விடுக்கப்படும் கோரிக்கை அல்ல. இதை சோஷலிஸ்ட்டுகள் அனைவரும் வலியுறுத்தி வருகின்றனா்.
அடுத்த ஆண்டு உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், பல அடுக்குகளில் உள்ள தோ்தல் மாஃபியாவுக்கு எதிராக செயல்பட வேண்டியுள்ளது. இதற்கு மக்களாட்சி, அரசமைப்புச் சட்டம், அரசியல் சாசன அமைப்பின் நம்பகத்தன்மையைக் காக்க விரும்புவோா் ஒன்றிணைய வேண்டும்.
உத்தர பிரதேசத்தில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டதற்கு ஆதாரமாக காண்பிக்க எந்தப் பணியையும் பாஜக மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது
திமுகவுக்கு ஆதரவு; காங்கிரஸுக்கு கண்டனம்: அகிலேஷ் யாதவ்

பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்

மமதாவைச் சந்தித்தார் அகிலேஷ் யாதவ்!

உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
