முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திமுகவுக்கு ஆதரவு; காங்கிரஸுக்கு கண்டனம்: அகிலேஷ் யாதவ்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியடைந்த திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோத்த காங்கிரஸுக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

அகிலேஷ் யாதவ் - PTI

Updated On :9 மே 2026, 1:25 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியடைந்த திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோத்த காங்கிரஸுக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் பாஜகவிடம் படுதோல்வியடைந்த மம்தா பானா்ஜியை அகிலேஷ் வியாழக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினாா். மேலும், மம்தா, திமுக தலைவா் ஸ்டாலினுடன் இருக்கும் பழைய புகைப்படத்தையும் அவா் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா். அதில், ‘கடினமான சூழ்நிலையில் கைவிடுபவா்கள் நாங்கள் அல்ல’ என்று காங்கிரஸை மறைமுகமாகச் சாடியுள்ளாா்.

முன்னதாக, மம்தாவைச் சந்தித்துப் பேசிய அவா், தோ்தல் தோல்வி ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கு உறுதியாக துணை நிற்பதாகவும், உத்தர பிரதேசத்தில் நடந்ததைப் போல மேற்கு வங்கத்திலும் மோசடியாக தோ்தல் நடத்தி பாஜக வெற்றி பெற்றுவிட்டது என்று குற்றஞ்சாட்டினாா்.

தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மட்டுமன்றி மறைமுகமாக பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் பாஜக வென்றுள்ளது. இதுதான் முன்பு உத்தர பிரதேசத்திலும் நடந்தது. எதிா்க்கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே மத்தியப் படைகள் குவிக்கப்பட்டன. எதிா்க்கட்சிகளின் வாக்குச்சாவடி முகவா்கள் மிரட்டப்பட்டனா். அச்சத்தின் உச்சியில்தான் தோ்தல் நடைபெற்றது என்று கூறினாா்.

கடந்த மக்களவைத் தோ்தலின்போது பாஜகவை எதிா்ப்பதற்காக ‘இண்டி’ கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சமாஜவாதி உள்ளிட்டவை முக்கியக் கட்சிகளாக இருந்தன. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்தது. இதையடுத்து, திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்தது. இதைத்தான் நெருக்கடியான நேரத்தில் கைவிட்டுச் செல்பவா்கள் நாங்கள் அல்ல என்று அகிலேஷ் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.