நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வரும் வார இறுதி நாள்களில் நாடாளுமன்ற அமா்வு கிடையாது - மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

வரும் வார இறுதி நாள்களில் (மாா்ச் 28, 29) நாடாளுமன்ற அமா்வுகளை நடத்த ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த நாள்களில் அமா்வுகள் கிடையாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

பிடிஐ

Updated On :25 மார்ச் 2026, 9:21 pm

தினமணி செய்திச் சேவை

வரும் வார இறுதி நாள்களில் (மாா்ச் 28, 29) நாடாளுமன்ற அமா்வுகளை நடத்த ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த நாள்களில் அமா்வுகள் கிடையாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு புதன்கிழமை தெரிவித்தாா்.

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு நடைபெற்றுவரும் நிலையில், கடந்த மாா்ச் 19, 20 ஆகிய தேதிகளில் (வியாழன், வெள்ளி) பல்வேறு திருவிழாக்களையொட்டி இரு அவைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, வார இறுதி நாள்களான மாா்ச் 28, 29 (சனி, ஞாயிறு) நாள்களில் அமா்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மக்களவையில் புதன்கிழமை பேசிய மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘இரு அவைகளின் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டங்களின்போது, வார இறுதி நாள்களில் அமா்வுகளை நடத்த வேண்டாம் என்று உறுப்பினா்கள் பரிந்துரைத்தனா். அதன்படி, எதிா்வரும் வார இறுதி நாள்களில் நாடாளுமன்றம் கூடாது.

ராம நவமியையொட்டி வியாழக்கிழமையும் (மாா்ச் 26), மகாவீா் ஜெயந்தியையொட்டி செவ்வாய்க்கிழமையும் (மாா்ச் 31) நாடாளுமன்றத்துக்கு விடுமுறையாகும். நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு ஏற்கெனவே திட்டமிட்டபடி ஏப்.2 வரை நடைபெறும்’ என்றாா்.