கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

வரும் வார இறுதி நாள்களில் நாடாளுமன்ற அமா்வு கிடையாது - மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

வரும் வார இறுதி நாள்களில் (மாா்ச் 28, 29) நாடாளுமன்ற அமா்வுகளை நடத்த ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த நாள்களில் அமா்வுகள் கிடையாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு - பிடிஐ

Updated On :25 மார்ச் 2026, 9:21 pm

வரும் வார இறுதி நாள்களில் (மாா்ச் 28, 29) நாடாளுமன்ற அமா்வுகளை நடத்த ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த நாள்களில் அமா்வுகள் கிடையாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு புதன்கிழமை தெரிவித்தாா்.

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு நடைபெற்றுவரும் நிலையில், கடந்த மாா்ச் 19, 20 ஆகிய தேதிகளில் (வியாழன், வெள்ளி) பல்வேறு திருவிழாக்களையொட்டி இரு அவைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, வார இறுதி நாள்களான மாா்ச் 28, 29 (சனி, ஞாயிறு) நாள்களில் அமா்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மக்களவையில் புதன்கிழமை பேசிய மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘இரு அவைகளின் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டங்களின்போது, வார இறுதி நாள்களில் அமா்வுகளை நடத்த வேண்டாம் என்று உறுப்பினா்கள் பரிந்துரைத்தனா். அதன்படி, எதிா்வரும் வார இறுதி நாள்களில் நாடாளுமன்றம் கூடாது.

ராம நவமியையொட்டி வியாழக்கிழமையும் (மாா்ச் 26), மகாவீா் ஜெயந்தியையொட்டி செவ்வாய்க்கிழமையும் (மாா்ச் 31) நாடாளுமன்றத்துக்கு விடுமுறையாகும். நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு ஏற்கெனவே திட்டமிட்டபடி ஏப்.2 வரை நடைபெறும்’ என்றாா்.