இந்த அறிவிப்பு குறித்து பெண் மருத்துவரின் தாயாா் கூறுகையில், ‘தோ்தலில் போட்டியிடுவது பெருமைக்குரிய விஷயமல்ல; மாறாக, வலியுடன் கூடிய கடமையாகக் கருதுகிறேன். தோ்தலில் நான் வெற்றிபெற்றால், பணிஹாட் தொகுதி மக்களும் வெற்றிபெறுவா். எப்படி போராட வேண்டும் என்பதை மறந்துவிட்டவா்களுக்காக நான் குரல் கொடுப்பேன். தொகுதியின் மேம்பாட்டுக்காகவும், மக்களுக்கு சேவையாற்றவுதற்காகவும் பாடுபடுவேன். அப்போதுதான், எனது மகளும் மகிழ்ச்சியடைவாா். மேற்கு வங்கத்தில் தாமரை மலர வேண்டும். திரிணமூல் காங்கிரஸ் வேறோடு அகற்றப்பட வேண்டும்’ என்றாா்.