வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக ஐஆர்சிடிசி மீது ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பாட்னாவை சேர்ந்த ரிதேஷ் குமார் என்பவர், மார்ச் 15 ஆம் தேதியில் பாட்னா - டாட்டா நகர் (21896) வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணித்தார். இந்த பயணத்தின்போது, அவருக்கு உணவு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரிதேஷ், அதனை விடியோவாகவும் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து, ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து பயணிகள் விமர்சிக்கத் தொடங்கினர். இதுகுறித்து, ரயில் மேலாளரிடம் புகாரும் அளிக்கப்பட்டது.
இந்த விடியோ, சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.
அறிக்கையில், எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்துக்கு (ஐஆர்சிடிசி) ரூ. 10 லட்சமும், சேவை வழங்குநருக்கு ரூ. 50 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டு, ஒப்பந்தத்தை ரத்துசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Summary
Railways fines IRCTC, caterer Rs 60 L over poor food quality
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜம்மு - ஸ்ரீநகா் வந்தே பாரத் ரயில் சேவை: அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தாா்

சென்னை-ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவையை விரைந்து தொடங்கக் கோரிக்கை

வந்தே பாரத் ரயில் தடம் புரண்டது!

வந்தே பாரத் மீது கல் எறிந்தவா்களை கண்டறிந்தது எப்படி? அமைச்சா் விளக்கம்
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

