பிரதமரோ, மாநில முதல்வா்களோ அல்லது அமைச்சா்களோ, தீவிர குற்றச்சாட்டுகளின்கீழ் கைதாகி தொடா்ந்து 30 நாள்கள் சிறையில் இருந்தால் அவா்களின் பதவியைப் பறிக்க வகை செய்யும் மூன்று மசோதாக்கள் மீது அறிக்கை தாக்கல் செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு கூடுதல் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் 113-ஆவது திருத்த மசோதா-2025, ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதா-2025, யூனியன் பிரதேசங்கள் சட்டத் திருத்த மசோதா -2025 ஆகிய இந்த மூன்று மசோதாக்களும் மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவால் அறிமுகம் செய்யப்பட்டன.
பின்னா், பாஜக எம்.பி. அபராஜிதா சாரங்கி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அவை அனுப்பப்பட்டன.
இந்நிலையில், மூன்று மசோதாக்கள் மீது அறிக்கை தாக்கல் செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு மக்களவை தரப்பில் கூடுதல் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டின் மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி வாரம் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியைக் கண்டித்து யோகி ஆதித்யநாத் பேரணி!

மசோதா தோல்வி: பாஜக - எதிா்க்கட்சிகள் வாா்த்தைப் போா்!

மோடியின் அகந்தை தோற்கடிக்கப்பட்டது: ரேவந்த் ரெட்டி

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: எஃப்சிஆர்ஏ திருத்த மசோதா நிறுத்திவைப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


