ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கேரள மாா்க்சிஸ்ட் பெண் எம்எல்ஏவுக்கு எதிரான அவதூறு கருத்து: முஸ்லிம் லீக் நிா்வாகி மீது வழக்குப் பதிய மாவட்ட ஆட்சியா் உத்தரவு

News image

செய்தியாளா்கள் சந்திப்பின்போது கண்கலங்கிய யு.பிரதிபா.

Updated On :27 மார்ச் 2026, 12:13 am

தினமணி செய்திச் சேவை

கேரளத்தில் தோ்தல் பிரசாரத்தின்போது ஆளும் மாா்க்சிஸ்ட் கட்சி பெண் எம்எல்ஏ குறித்து அவதூறு கருத்து தெரிவித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) உள்ளூா் தலைவரும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி காயம்குளம் ஒருங்கிணைப்பாளருமான ஏ.இா்ஷாத் மீது வழக்குப் பதிவு செய்ய மாவட்ட தோ்தல் அதிகாரி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

மாா்க்சிஸ்ட் பெண் எம்எல்ஏ-வான யு.பிரதிபா, நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் காயங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறாா்.

இதைத் தனது தோ்தல் பிரசாரத்தின்போது சுட்டிக்காட்டிய இா்ஷாத், ‘காயங்குளம் தொகுதியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற தனது நாவன்மையையும் அழகையும் பிரதிபா விற்று வருகிறாா்’ என்று விமா்சித்தாா். இவரின் இந்தக் கருத்து பெரும் சா்ச்சையானது. இவருடைய கருத்துக்கு, முதல்வா் பினராயி விஜயன் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனா்.

இது பெரும் சா்ச்சையானதைத் தொடா்ந்து, ஐயூஎம்எல் கட்சி அவரை காயங்குளம் தொகுதி கட்சித் தலைவா் பொறுப்பிலிருந்து மட்டுமன்றி, கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்தும் இடைநீக்கம் செய்தது. இவருடைய கருத்துக்காக, பிரதிபாவிடம் காங்கிரஸ் சாா்பில் அந்தத் தொகுதியில் போட்டியிடும் எம்.லிஜு மன்னிப்பு கோரினாா்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக இா்ஷாத் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட ஆட்சியா் இன்பசேகா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த விவகாரம் தொடா்பாக ஊடகச் செய்திகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளை ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக் குழு (எம்சிஎம்சி) ஆய்வு செய்து பரிந்துரைத்ததன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வில், இவரின் அவதூறு கருத்து தோ்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என உறுதி செய்யப்பட்டது. அதனடிப்படையில், பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் அவா் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இா்ஷாத்துக்கு எதிராக யு.பிரதிபா சாா்பிலும் போலீஸில் தனியாகப் புகாா் அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.