வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

பாகிஸ்தானில் ஊரடங்கு; இந்தியாவில் உண்டா? நிர்மலா சீதாராமன் பதில்!

இந்தியாவில் ஊரடங்கு என தவறான வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு

News image

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 12:47 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவில் ஊரடங்கு அறிவிப்புக்கு வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ”அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவே வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஊரடங்கு எப்போது அறிவிக்கப்பட்டது? பாகிஸ்தானில்தான் ஊரடங்கு. இந்தியாவில் அல்ல.

வங்கதேசத்தின் நிலைமையைப் பாருங்கள். அவர்கள் துன்புறுவதை நான் குறிப்பிடவில்லை; ஓர் உண்மை ஒப்பீட்டுக்காகத்தான் சொல்கிறேன்.

ஒரு நல்ல அண்டை நாடாக, எந்த உதவி கோரப்பட்டாலும், எங்கள் தரப்பிலிருந்து நாங்கள் வழங்குகிறோம். அண்டை நாடுகளுடனான நல்லுறவை நாங்கள் பேணி வருகிறோம்.

மத்திய கிழக்கில் போர் காரணமாக, நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் எந்தச் சிரமத்தையும் எதிர்கொள்ளக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

பாகிஸ்தானில் என்ன நடக்கிறது? உயர் ஆக்டேன் எரிபொருள் விலை 200 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசலின் விலை ஒரே இரவில் சுமார் 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது. பெட்ரோல், இப்போது லிட்டருக்கு 321 பாகிஸ்தான் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பாகிஸ்தானில் கூட்டங்கள், பொது நிகழ்வுகளில் கட்டுப்படுத்தும்விதமாக ஸ்மார்ட் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, அரசு அலுவலகங்களின் வேலை நாள்கள் வாரத்தில் 4 நாள்களாக மாற்றப்பட்டுள்ளன, தனியார் அலுவலகங்களில் 50 சதவிகிதத்தினர் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால், இவற்றில் எதையும் இந்தியாவில் நாங்கள் செய்யவில்லை. இருப்பினும், இந்தியாவில் ஊரடங்கு என்று சில தலைவர்கள் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். இந்தியாவில் ஊரடங்குக்கு வாய்ப்பில்லை. இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.