கலால் வரியைக் குறைத்ததன் காரணம் என்ன? நிர்மலா சீதாராமன் விளக்கம்!
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்ததன் காரணத்தை மத்திய நிதியமைச்சர் விளக்கியது குறித்து...

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
கோப்புப் படம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
கோப்புப் படம்
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்ததன் காரணத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கியுள்ளார்.
முன்னதாக, டீசல் மீதான கலால் வரி ரூ. 10-ஐ முழுமையாக ரத்து செய்தும், பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ரூ. 13-ல் இருந்து ரூ. 3 ஆக குறைத்தும் மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளுக்கு பிரதமர் பதிலளிக்கும் விதமாக இந்த விஷயத்திலும் எல்பிஜி அல்லது எரிபொருள் பற்றாக்குறையால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் நுகர்வோருக்கான விலையை உயர்த்தக்கூடாது என்றும் பிரதமர் கூறினார்.
இதனைக் கருத்தில் கொண்டு எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். இதன்மூலம், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்கலாம்.
மேலும், நாட்டில் தானியங்கி பரிமாற்ற திரவம் (ஏடிஎஃப்) கிடைப்பதை உறுதி செய்வதற்காக அதன் ஏற்றுமதி மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...