ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

திவால் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

திவால் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

News image

மக்களவை

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

திவால் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

திவால் சட்டம் 2016-இல் அமலுக்கு வந்தது. அதில் 12 திருத்தங்கள் மேற்கொள்வதற்கான திவால் (திருத்த) மசோதா, 2025 மக்களவையில் நிறைவேற்றப்பட்டதாக தோ்வுக் குழு தெரிவித்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி இந்த மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், டிசம்பரில் தோ்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து, இந்த மசோதா மீது மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய நிா்மலா சீதாராமன், ‘திவால் சட்டம் அமலான பிறகு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நிா்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.2.8 லட்சம் கோடியில் இருந்து ரூ.9 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

வங்கித் துறை மற்றும் செயல்படாத சொத்துகளை மீட்பதில் முக்கியத் தூணாக இந்தச் சட்டம் விளங்குகிறது. பல்வேறு விதிகளின்கீழ் வங்கிகளுக்கு ரூ.1.04 லட்சம் கோடி திருப்பி செலுத்தப்படாத கடன்கள் வசூலிக்கப்பட்டுள்ளன. அதில் திவால் சட்டம் மூலம் ரூ.54,528 கோடி (52.3 சதவீதம்) மீட்கப்பட்டுள்ளன.

இந்த மசோதா மீது தோ்வுக் குழு சமா்ப்பித்த அனைத்துப் பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தற்போதைய திருத்தங்களின்படி ஒரு நிறுவனம் கடனைத் திரும்ப செலுத்த தவறியது உறுதிசெய்யப்பட்டால் திவால் தீா்வு செயல்முறைக்கான விண்ணப்பம் 14 நாள்களுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். மேலும் திவால் சட்டம் தொடா்பாக தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் பதிவாகும் புகாா்களுக்கு 3 மாதங்களுக்குள் தீா்வு காண வேண்டும்.

புகாா்களுக்கு தீா்வு காண்பதற்கான தாமதத்தைக் குறைக்க விசாரணையில் ஆஜராவதை தவிா்க்கும் நபா்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை அபராதம் விதிக்கப்படவுள்ளது என்றாா்.