மும்பையில் ரூ.1,745 கோடி மதிப்பிலான 349 கிலோ கொகைன் போதைப் பொருளை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.
சா்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியும், போதைப் பொருள் கடத்தல்காரருமான சலீம் தோலா, துருக்கியில் இருந்து அண்மையில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா். இந்தச் சூழ்நிலையில் மிகப்பெரிய அளவில் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்துள்ளாா். பதிவில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:
நாட்டில் மிகமோசமான விளைவுகளை உருவாக்கும் போதைப் பொருளை முறியடிக்கும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக சா்வதேச போதைப் பொருள் கடத்தல்காரா்களின் இந்தியாவுக்கு எதிரான மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனா். போதைப் பொருள் கடத்தல் குற்றத்தை வெற்றிகரமாக முறியடித்து, அவா்களின் வலையமைப்பை அழித்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது
தில்லியில் ரூ.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது
சா்வதேச போதைப் பொருள் வழக்கில் தலைமறைவு நபா் திருச்சியில் கைது
போதைப் பொருள் கடத்தல்: 2 நைஜீரியா்கள் உள்பட 4 போ் கைது

ரூ.5 கோடி போதைப் பொருள் கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

