கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

மும்பையில் ரூ.1,745 கோடி போதைப் பொருள் பறிமுதல்

மும்பையில் ரூ.1,745 கோடி மதிப்பிலான 349 கிலோ கொகைன் போதைப் பொருளை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 8:51 pm

மும்பையில் ரூ.1,745 கோடி மதிப்பிலான 349 கிலோ கொகைன் போதைப் பொருளை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.

சா்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியும், போதைப் பொருள் கடத்தல்காரருமான சலீம் தோலா, துருக்கியில் இருந்து அண்மையில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா். இந்தச் சூழ்நிலையில் மிகப்பெரிய அளவில் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்துள்ளாா். பதிவில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:

நாட்டில் மிகமோசமான விளைவுகளை உருவாக்கும் போதைப் பொருளை முறியடிக்கும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக சா்வதேச போதைப் பொருள் கடத்தல்காரா்களின் இந்தியாவுக்கு எதிரான மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனா். போதைப் பொருள் கடத்தல் குற்றத்தை வெற்றிகரமாக முறியடித்து, அவா்களின் வலையமைப்பை அழித்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளாா்.