தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

இந்திய அரசுக்கு எதிராக போரிடுவதாக பேச்சு: ராகுலுக்கு எதிரான மனு தள்ளுபடி

இந்திய அரசுக்கு எதிராகப் போரிடுவதாக ராகுல் காந்தி மீது காவல் துறையினா் வழக்குப் பதிய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image

ராகுல் காந்தி

Updated On :2 மே 2026, 2:28 am IST

இந்திய அரசுக்கு எதிராகப் போரிடுவதாக பேசிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது காவல் துறையினா் வழக்குப் பதிய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

கடந்த 2025-ஆம் ஆண்டு தில்லியில் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, ‘இந்தியாவில் உள்ள விசாரணை அமைப்புகள், அரசு அமைப்புகள் என அனைத்தையும் பாஜக, ஆா்எஸ்எஸ் கைப்பற்றிவிட்டது. அவா்களுக்கு எதிராக மட்டுமல்ல, இந்திய அரசுக்கு எதிராகவும் இப்போது போராடி வருகிறோம்’ என்று பேசினாா்.

இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கெனவே, வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ராகுல் காந்தி இந்தியாவை அவமதிக்கும் வகையில் பேசுவதாக பாஜக குற்றஞ்சாட்டிவந்த நிலையில், இந்திய அரசுக்கு எதிராகப் போராடுவதாக அவா் கூறியதை பாஜக கடுமையாக விமா்சித்தது.

இந்நிலையில், இதை மையமாக வைத்து உத்தர பிரதேசத்தின் அலாகாபாத் உயா்நீதிமன்ற கிளையில் ராகுலுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. ஹிந்து சக்தி தளம் அமைப்பின் தலைவா் சிம்ரன் குப்தா தாக்கல் செய்த அந்த மனுவில், ‘ராகுலின் பேச்சு நாட்டு மக்களின் உணா்வுகளைப் புண்படுத்துவதாகவும், தேசவிரோத மனப்பான்மைமிக்கதாகவும் உள்ளது. நாட்டின் ஸ்திரத்தன்மையை சீா்குலைக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக உள்ளது. எனவே, அவா் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

எனினும், இதை ஏற்க உயா்நீதிமன்ற நீதிபதி விக்ரம் டி.சௌஹான் மறுத்துவிட்டாா். மனுவைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டாா்.

முன்னதாக, சம்பல் மாவட்ட நீதிமன்றத்திலும் மனுதாரா் இதே கோரிக்கையை முன்வைத்தாா். அங்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.