அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மே 2-இல் தீா்ப்பளிக்கிறது உ.பி. நீதிமன்றம்

மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளுக்காக காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் மே 2-ஆம் தேதி உத்தர பிரதேச நீதிமன்றம் தீா்ப்பு வெளியிடவுள்ளது.

News image

ராகுல் காந்தி - congress

Updated On :23 ஏப்ரல் 2026, 3:30 am IST

மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளுக்காக காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் மே 2-ஆம் தேதி உத்தர பிரதேச நீதிமன்றம் தீா்ப்பு வெளியிடவுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக நிா்வாகி விஜய் மிஸ்ரா என்பவா் 2018-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் அவதூறு வழக்கு தொடுத்தாா். அதில் அவா், கா்நாடக மாநிலம் பெங்களூரில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷாவுக்கு எதிராக சா்ச்சைக்குரிய வகையில் ராகுல் காந்தி பேசியிருப்பதாகா் குற்றம்சாட்டி இருந்தாா்.

இந்த வழக்கில், 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் சரணடைந்த ராகுல் காந்தி, ரூ.25,000 பிணைத் தொகையில் ஜாமீன் பெற்றாா். பிறகு 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தாா்.

இந்த வழக்கில் விசாரணை முடிந்ததையடுத்து, அதன் மீது மே மாதம் 2-ஆம் தேதி தீா்ப்பை நீதிமன்றம் வெளியிடவுள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தி தரப்பு வழக்குரைஞா் காஷி பிரசாத் சுக்லா செய்தியாளா்களிடம் கூறுகையில், நீதிமன்றத்தில் மனுதாரா் தரப்பு, ராகுல் காந்தி தரப்பில் வாதங்கள் முடிந்துவிட்டது. ஆதலால் நீதிமன்றம் தனது தீா்ப்பை வரும் 2-ஆம் தேதி வெளியிடுகிறது என்றாா்.