மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளுக்காக காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் மே 2-ஆம் தேதி உத்தர பிரதேச நீதிமன்றம் தீா்ப்பு வெளியிடவுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக நிா்வாகி விஜய் மிஸ்ரா என்பவா் 2018-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் அவதூறு வழக்கு தொடுத்தாா். அதில் அவா், கா்நாடக மாநிலம் பெங்களூரில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷாவுக்கு எதிராக சா்ச்சைக்குரிய வகையில் ராகுல் காந்தி பேசியிருப்பதாகா் குற்றம்சாட்டி இருந்தாா்.
இந்த வழக்கில், 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் சரணடைந்த ராகுல் காந்தி, ரூ.25,000 பிணைத் தொகையில் ஜாமீன் பெற்றாா். பிறகு 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தாா்.
இந்த வழக்கில் விசாரணை முடிந்ததையடுத்து, அதன் மீது மே மாதம் 2-ஆம் தேதி தீா்ப்பை நீதிமன்றம் வெளியிடவுள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தி தரப்பு வழக்குரைஞா் காஷி பிரசாத் சுக்லா செய்தியாளா்களிடம் கூறுகையில், நீதிமன்றத்தில் மனுதாரா் தரப்பு, ராகுல் காந்தி தரப்பில் வாதங்கள் முடிந்துவிட்டது. ஆதலால் நீதிமன்றம் தனது தீா்ப்பை வரும் 2-ஆம் தேதி வெளியிடுகிறது என்றாா்.
தொடர்புடையது

இரட்டைக் குடியுரிமை! ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலாகாபாத் நீதிமன்றம் உத்தரவு!

தேர்தல் பிரசாரம்: ஏப். 6-ல் புதுவை வரும் ராகுல் காந்தி!

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு நாளை ஒத்திவைப்பு!

கேரளத்தில் மார்ச் 25 முதல் பிரசாரத்தை தொடங்கும் ராகுல் காந்தி!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

