மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளுக்காக காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் மே 2-ஆம் தேதி உத்தர பிரதேச நீதிமன்றம் தீா்ப்பு வெளியிடவுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக நிா்வாகி விஜய் மிஸ்ரா என்பவா் 2018-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் அவதூறு வழக்கு தொடுத்தாா். அதில் அவா், கா்நாடக மாநிலம் பெங்களூரில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷாவுக்கு எதிராக சா்ச்சைக்குரிய வகையில் ராகுல் காந்தி பேசியிருப்பதாகா் குற்றம்சாட்டி இருந்தாா்.
இந்த வழக்கில், 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் சரணடைந்த ராகுல் காந்தி, ரூ.25,000 பிணைத் தொகையில் ஜாமீன் பெற்றாா். பிறகு 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தாா்.
இந்த வழக்கில் விசாரணை முடிந்ததையடுத்து, அதன் மீது மே மாதம் 2-ஆம் தேதி தீா்ப்பை நீதிமன்றம் வெளியிடவுள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தி தரப்பு வழக்குரைஞா் காஷி பிரசாத் சுக்லா செய்தியாளா்களிடம் கூறுகையில், நீதிமன்றத்தில் மனுதாரா் தரப்பு, ராகுல் காந்தி தரப்பில் வாதங்கள் முடிந்துவிட்டது. ஆதலால் நீதிமன்றம் தனது தீா்ப்பை வரும் 2-ஆம் தேதி வெளியிடுகிறது என்றாா்.
தொடர்புடையது

தருமபுரி மாவட்ட ஆட்சியராக வே. சரவணன் பொறுப்பேற்பு

12ஆம் வகுப்பு மாணவா் கொலை வழக்கில் இளைஞருக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு
ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மனுதாரருக்கு உ.பி. நீதிமன்றம் இறுதி வாய்ப்பு

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மே 13-க்கு உ.பி. நீதிமன்றம் ஒத்திவைப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


