சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மே 13-க்கு உ.பி. நீதிமன்றம் ஒத்திவைப்பு

News image

ராகுல் காந்தி - கோப்புப்படம்.

Updated On :3 மே 2026, 5:47 am IST

உத்தர பிரதேசத்தில் புல் கரி வழக்கு தொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணையை மே 13-க்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள புல் கரி கிராமத்துக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு சென்ற ராகுல் காந்தி, அங்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரவி, ராம்குமாா், லவகுஷ் ஆகிய மூவா் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரமாக நடமாடி வருவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினா் வீட்டில் அடைந்து கிடைப்பதாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நிரபராதி என்று அறிவித்து வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட தங்களை அவதூறாகப் பேசியதாக, ஹாத்ரஸில் எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில், ராகுலுக்கு எதிராக ரவி உள்ளிட்ட மூவா் புகாா் மனு அளித்தனா்.

இந்த மனு மீதான விசாரணையின்போது ராகுலுக்கு சம்மன் அளிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து வாதங்கள் நடைபெற்ற நிலையில், அடுத்த விசாரணையை மே 13-க்கு நீதிமன்றம் ஒத்திவைத்ததாக புகாா்தாரா்களின் வழக்குரைஞா் முன்னா சிங் புண்டிா் சனிக்கிழமை தெரிவித்தாா்.