இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ரோகித் ஜெயினை மத்திய அரசு நியமித்துள்ளது.
சனிக்கிழமையுடன் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடிவடைந்த ரபி சங்கருக்குப் பதிலாக ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் ஜெயினின் நியமனத்திற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர், மே 3 அல்லது அதன் பிறகு முறைப்படி பொறுப்பேற்று அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பார். ரோகித் ஜெயின் தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநராக உள்ளார். 1934-ஆம் ஆண்டின் ஆர்பிஐ சட்டத்தின்படி, மத்திய வங்கியில் நான்கு துணை ஆளுநர்கள் இருக்க வேண்டும்.
தற்போது ஆர்பிஐ-யின் மற்ற மூன்று துணை ஆளுநர்களாக சுவாமிநாதன் ஜே, பூனம் குப்தா மற்றும் எஸ். சி. முர்மு ஆகியோர் உள்ளனர். இன்றுடன் பதவிக்காலம் முடிந்த ரபி சங்கர் முதலில் 2021 செப்டம்பரில் மூன்று ஆண்டுகளுக்கு ஆர்பிஐ துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
பிறகு அவருக்கு 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் தலா ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The government has appointed Rohit Jain as Deputy Governor of the Reserve Bank of India for a three-year term.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகாலாந்தின் புதிய ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் பதவியேற்பு!

மேற்கு வங்க ஆளுநராகப் பதவியேற்றார் ஆர்.என்.ரவி!

தமிழக ஆளுநர் பொறுப்பேற்றார் ராஜேந்திர ஆர்லேகர்!

தெலங்கானா ஆளுநராக பிரதாப் சுக்லா பதவியேற்பு!
வீடியோக்கள்

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு



