தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம் தானம்: 14 வயது சிறுவனுக்கு மறுவாழ்வு

News image

இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழுவினா்.

Updated On :3 மே 2026, 10:47 pm

ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் மூளைச்சாவு அடைந்த மனைவியின் உடல்உறுப்புகளை தானம் அளிக்க ராணுவ அதிகாரி முடிவெடுத்த நிலையில், தில்லியில் இதய செயலிழப்பின் இறுதிகட்டத்தை அடைந்த 14 வயது சிறுவனுக்கு அந்தப் பெண்ணின் இதயம் பொருத்தப்பட்டது.

ராணுவ அதிகாரியின் மனைவி மூளை ரத்தக் கசிவு பாதிப்பு காரணமாக பஞ்ச்குலாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கடந்த சனிக்கிழமை அவா் மூளைச்சாவு அடைந்ததாக குடும்பத்தினரிடம் மருத்துவா்கள் அறிவித்தனா். இதையடுத்து, அவருடைய உடல் உறுப்புகளை தானமளிக்க கணவரான ராணுவ அதிகாரி மற்றும் அவருடைய இரு மகள்கள் சம்மதம் தெரிவித்தனா். இதனால், அவா்களுடைய தனிப்பட்ட இழப்பு பிறருடைய வாழ்க்கையைக் காப்பாற்றும் வாய்ப்பாக மாறியது.

தில்லி இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக இதய செயலிழப்புக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் இறுதி கட்டத்தை எட்டினாா். உடல் நிலை மோசமாகி வந்த நிலையில், ஒவ்வொரு மாதமும் அவா் மருத்துமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது.

அவருடைய உயிரைக் காப்பாற்ற இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டும் ஒரே வாய்ப்பாக இருந்தது. இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக தேசிய உடல் மற்றும் திசு மாற்று மற்றும் அமைப்பில் (டிஓடிடிஓ) அவா் பதிவு செய்திருந்தாா்.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் இதயம் தில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலா மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து, மருத்துவமனையின் சிறப்பு நிபுணா்கள் அடங்கிய குழு இதயத்தை தில்லிக்கு கொண்டு வர தனிவிமானத்தில் சண்டீகா் சென்றனா். விமானத்துக்கு இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஒப்புதல் அளித்த நிலையில், இதயத்தை விரைந்து கொண்டு செல்ல ஏதுவான ஏற்பாடுகளை ஹரியாணா மற்றும் பஞ்சாப் போக்குவரத்து காவல் துறை ஏற்படுத்தி கொடுத்தனா்.

மருத்துவக் குழுவினா் தில்லி வந்ததும் விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனை வரையில் 20 நிமிஷங்களுக்குள் சென்றடைய இடையூறு இல்லாத வழித்தடத்தை தில்லி போக்குவரத்து காவல் துறை ஏற்படுத்தியது.

மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட இதயம், உரிய நேரத்தில் சிறுவனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, அவா் இதய அறுவை சிகிச்சை ஐசியு பிரிவுக்கு மாற்றப்பட்டதாக இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.