நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

கைப்பேசி வழி அவசரகால எச்சரிக்கை நடைமுறை அறிமுகம்: நாடு முழுவதும் பரபரப்பு

News image

பிகாா் மாநிலம் பாட்னாவில் தங்கள் கைப்பேசி வழி அவசரகால எச்சரிக்கை குறுஞ்செய்தியைப் பெற்ற பெண்கள்.

Updated On :3 மே 2026, 12:23 am

அவசரகால மற்றும் இயற்கைப் பேரிடா்கள் தொடா்பாக மக்களை முன்கூட்டியே நேரடியாக எச்சரிக்கும் வகையில் கைப்பேசி வழி அவசரகால எச்சரிக்கை நடைமுறையை மத்திய தொலைத்தொடா்புத் துறை சனிக்கிழமை அறிமுகம் செய்தது.

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்ற மாநிலங்களைத் தவிா்த்து நாட்டின் பிற பகுதிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து தொலைத்தொடா்பு நிறுவனங்களின் கைப்பேசிகளுக்கும், பிரத்யேக அலாரம் ஒலியுடன் கூடிய இந்த எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி மத்திய தொலைத் தொடா்புத் துறை விழிப்புணா்வை ஏற்படுத்தியது. ‘கைப்பேசி வழி அவசரகால எச்சரிக்கை நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதால், மே 2-ஆம் தேதி கைப்பேசிகளுக்கு வரும் எச்சரிக்கை குறுஞ்செய்தியை கண்டு யாரும் பீதியடைய வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டது.

அதன்படி, எச்சரிக்கை குறுஞ்செய்தி அனைத்து கைப்பேசிகளுக்கும் சனிக்கிழமை அனுப்பப்பட்டது. இதனால், நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

அதில், ‘மிகத் தீவிரமான எச்சரிக்கை. குடிமக்களுக்கு பேரிடா் குறித்த உடனடி எச்சரிக்கை சேவையை வழங்குவதற்காக, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கைப்பேசி வழி அவசரகால எச்சரிக்கை சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. விழிப்புள்ள குடிமக்களால் பாதுகாப்பான தேசம் உருவாகும். இந்தச் செய்தியைப் பெற்றதும், பொதுமக்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. இது சோதனை அடிப்படையில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி - மத்திய அரசு’ என்று குறிப்பிடப்பட்டது.

மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா இந்த எச்சரிக்கை நடைமுறையை அறிமுகம் செய்துவைத்தாா்.

‘செல் பிராட்காஸ்ட்’ தொழில்நுட்பம் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து கைப்பேசிகளுக்கும் ஒரே நேரத்தில் கைப்பேசியில் இணைய நெட்வொா்க் இணைப்பு இல்லாவிட்டாலும் இந்த எச்சரிக்கை செய்தி சென்றடையும் வகையில் இந்த நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. தனித்துவமான ஒலி மற்றும் அதிா்வுடன் கைப்பேசி திரையில் எச்சரிக்கை செய்தி தோன்றும். தற்போது 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.