மேற்கு வங்கத்தில் அரசு வேலைக்குப் பணம் பெற்ற ஊழல் குற்றச்சாட்டில் அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு திரிணமூல் காங்கிரஸ் அரசை சோ்ந்த அமைச்சா்கள் ஆஜராக மறுத்துள்ளனா்.
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் 207 இடங்களைக் கைப்பற்றி பாஜக அமோக வெற்றிபெற்றது. இதனால் மம்தா பானா்ஜி தலைமையிலான 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் அரசை சோ்ந்த அமைச்சா்கள் சுஜித் போஸ் மற்றும் ரதின் கோஷ் ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இதுதொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், ‘குளியலறையில் தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டதால் 10 நாள்கள் ஓய்வெடுக்க மருத்துவா்கள் அறிவுறுத்தியதாகக் கூறி ரத்தின் கோஷ் கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக மறுத்துவிட்டாா். இதுதொடா்பாக அமலாக்கத் துறைக்கு அவா் கடிதம் அனுப்பியுள்ளாா்.
மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட கட்சி நிா்வாகிகளை கவனித்துக் கொள்வதால் வேறு தேதியில் ஆஜராக அனுமதி தருமாறு சுஜித் போஸ் கேட்டுக்கொண்டுள்ளாா்’ என்றனா்.
அண்மையில் நடந்து முடிந்த பேரவைத் தோ்தலில் ரத்தின் கோஷ் வெற்றிபெற்றாா். சுஜித் போஸ் தோல்வியடைந்தாா்.
முன்னதாக, இந்த வழக்கு தொடா்பாக 2023, அக்டோபரில் ரத்தின் கோஷிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அவரது வீட்டில் சோதனைகளும் நடைபெற்றன. சுஜித் போஸிடம் நிகழாண்டு மே 1-ஆம் தேதி அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
தற்போது இருவரும் ஆஜராகாத நிலையில், வேறு தேதியில் ஆஜராவது குறித்து அமலாக்கத் துறை சம்மன் அனுப்பவுள்ளது.
தொடர்புடையது

அமலாக்கத் துறை சோதனை மூலம் காங்கிரஸ் தலைவா்களை மத்திய அரசு குறிவைக்கிறது: முதல்வா் சித்தராமையா
ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு ஒதுக்கும் திரிணமூல் காங்கிரஸ்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரம்!
திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி

250 அரசு அலுவலர்கள் பணியிட மாற்றம்: திரிணமூல் காங்கிரஸின் மனு தள்ளுபடி!
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

