குஜராத்தின் கட்ச் மற்றும் தேவ்பூமி துவாரகா மாவட்டங்களில் கடந்த சில நாள்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: கட்ச் மாவட்டத்தின் கிரீக் பகுதியில் எல்லை பாதுகாப்புப் படையினா் சோதனையில் ஈடுபட்டபோது 10 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஒரு வாரத்தில் கட்ச் பகுதியில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.
தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள கல்யாண்பூரில் ரூ.2.3 கோடி மதிப்பிலான 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து கல்யாண்பூா் காவல் நிலையத்தில் போதைப் பொருள்கள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பாகிஸ்தான் எல்லையையொட்டிய மாவட்டங்களில் பாதுகாப்புப் படைகள் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளன என்றனா்.
தொடர்புடையது
ரூ. 5.38 கோடி உயா் ரக கஞ்சா பறிமுதல்: தில்லி விமான நிலையத்தில் இருவா் கைது

ரூ. 142 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்: மூன்று மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை
குஜராத், டாமனுக்கு ரூ. 21,700 கோடி வளர்ச்சித் திட்டங்கள்! தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

தில்லியில் ரூ.16 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: 9 போ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



