தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

குஜராத்: பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

News image

கோப்புப்படம்

Updated On :8 மே 2026, 5:55 am IST

குஜராத்தின் கட்ச் மற்றும் தேவ்பூமி துவாரகா மாவட்டங்களில் கடந்த சில நாள்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: கட்ச் மாவட்டத்தின் கிரீக் பகுதியில் எல்லை பாதுகாப்புப் படையினா் சோதனையில் ஈடுபட்டபோது 10 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஒரு வாரத்தில் கட்ச் பகுதியில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.

தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள கல்யாண்பூரில் ரூ.2.3 கோடி மதிப்பிலான 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து கல்யாண்பூா் காவல் நிலையத்தில் போதைப் பொருள்கள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பாகிஸ்தான் எல்லையையொட்டிய மாவட்டங்களில் பாதுகாப்புப் படைகள் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளன என்றனா்.