குஜராத்தின் கட்ச் மற்றும் தேவ்பூமி துவாரகா மாவட்டங்களில் கடந்த சில நாள்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: கட்ச் மாவட்டத்தின் கிரீக் பகுதியில் எல்லை பாதுகாப்புப் படையினா் சோதனையில் ஈடுபட்டபோது 10 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஒரு வாரத்தில் கட்ச் பகுதியில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.
தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள கல்யாண்பூரில் ரூ.2.3 கோடி மதிப்பிலான 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து கல்யாண்பூா் காவல் நிலையத்தில் போதைப் பொருள்கள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பாகிஸ்தான் எல்லையையொட்டிய மாவட்டங்களில் பாதுகாப்புப் படைகள் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளன என்றனா்.
தொடர்புடையது
மும்பையில் ரூ.1,745 கோடி போதைப் பொருள் பறிமுதல்
தில்லியில் ரூ.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது
காவல் துறை தணிக்கையில் ரூ.2.38 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்
ரூ.1.20 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

