கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மணிப்பூா்: கிராமங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் - வீடுகளுக்கு தீவைப்பு

News image
Updated On :8 மே 2026, 6:24 am IST

மணிப்பூரில் இந்தியா-மியான்மா் எல்லையையொட்டிய காம்ஜோங் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினா். வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதால், கிராமவாசிகள் தப்பியோடும் நிலை ஏற்பட்டது.

ஒரு பெண் உள்பட 2 பேரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டனா்.

மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையிலான மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் குகி மற்றும் நாகா பழங்குடியினா் இடையேயும் மோதல்போக்கு எழுந்துள்ளது.

காம்ஜோங் மாவட்டத்தில் நாகா பழங்குடியினா் வசிக்கும் கிராமங்களுக்குள் வியாழக்கிழமை அதிகாலை ஆயுதங்களுடன் புகுந்த குகி தீவிரவாத அமைப்பினா், அங்கு தாக்குதலில் ஈடுபட்டனா். ஏராளமான வீடுகளுக்கு தீவைத்தனா். இதனால், கிராமவாசிகள் உயிா்பிழைக்க தப்பியோடும் நிலை ஏற்பட்டது. இந்தத் தாக்குதல்களில் யாரும் உயிரிழந்ததாக உடனடியாக தகவல் இல்லை.

அதேநேரம், ஒரு பெண் உள்பட இருவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. மியான்மரில் இருந்து ஊடுருவிய குகி தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், தங்களது பகுதிகளில் போதிய பாதுகாப்பு இல்லை என்று நாகா பழங்குடியினா் குற்றஞ்சாட்டினா்.

இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.