திருமலை திருப்பதியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது இரண்டாவது நாள் பயணத்தின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை திருமலை திருப்பதி கோயிலுக்குச் சென்றார்.
கோயிலில் ஞானேஷ் குமார் மற்றும் அவரது மனைவிக்கும் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்த அர்ச்சகர்கள் பின்னர் மரியாதையும் அளித்தனர்.
தரிசனத்திற்குப் பிறகு, ரங்கநாயக மண்டபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு பட்டு வஸ்திரங்களை அணிவித்து கௌரவித்தனர்.
மேலும், தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர்.
உலகின் மிகவும் பணக்கார இந்து கோயிலான திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில், ஆந்திரப் பிரதேசத்தின் திருமலை மலையில் அமைந்துள்ளது. இது திருமலை திருப்பதி தேவஸ்தானம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
Summary
CEC Gyanesh Kumar on Sunday visited Tirumala temple and offered prayers to Lord Venkateswara as part of his second-day tour schedule, an official said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகன், மகளுடன் நடிகர் அஜித் குமார்!

நன்றி, மன்னிக்கவும் என பல செய்திகள் எனக்கு வருகின்றன! - 29 பட இயக்குநர் ரத்ன குமார் உருக்கம்!

மின்துறையில் 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் நிர்மல் குமார்

வாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




