தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளார்.
அஸ்ஸாமில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குறித்து செய்தியாளர்களுடன் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பேசுகையில், "வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைத் திறம்பட நடத்தியதற்காக ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட வேண்டும்.
அஸ்ஸாமில் பாஜக 100 இடங்களையும், மேற்கு வங்கத்தில் 200 இடங்களையும் பிடிக்கும்.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தவுடன், பாஜக வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டப்படும்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், ஹிமந்த பிஸ்வா சர்மாவின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி, "நல்ல வேளை, கடவுளுக்கு நன்றி. அவர் (ஹிமந்த பிஸ்வா சர்மா) சனி கிரகத்திலும் வெற்றி பெறுவார்கள் என்று கூறவில்லை.
தற்போதைய தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையமாக இல்லை என்பதே உண்மை. அது இப்போது பாஜக - தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஒரு துறையாக இருக்கிறது" என்று கூறினார்.
Summary
CEC Gyanesh Kumar Should be Given Bharat Ratna, Assam CM Himanta Biswa Sarma
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு

வாக்குப்பதிவில் புதிய வரலாறு! தமிழக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் 'சல்யூட்'!

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்க புதிய தீர்மான நோட்டீஸ்? எதிர்க்கட்சிகள் ஆயத்தம்!

தமிழகத் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



