தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தமிழக அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
காணொலி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு செய்யப்பட்ட முன்னேற்பாடுகள், பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தேர்தல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு வருகிற ஏப். 23 ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப். 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. நேற்று(ஏப். 7) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஏப். 9 ஆகும்.
தமிழக பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
CEC gyanesh kumar discussion with tn chief electoral officer for assembly election
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாது: தலைமைத் தேர்தல் ஆணையர்!
வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெறும்! - ஞானேஷ்குமார்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தமிழகம் வருகிறார்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


